ருக்‌ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம்

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ருக்‌ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில், பொறுப்பான பதவியில் இருந்த அரச மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து உரிய முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

இது ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...