பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அரசாங்கத்தின் உதவியுடன் அது முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.