சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு தூதுக்குழுவுடன் அவர் வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஷாஓ லேஜி சீன ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்து மூன்றாவது முக்கிய பொறுப்பை வகிப்பவர் ஆவார்.
