Saturday, July 27, 2024

Latest Posts

ரணில் நாட்டை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தாம் ஈர்க்கப்படவில்லை என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் வரை ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக போட்டியிடுவார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறக்கப்பட மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.