இலங்கையில் வெங்காயம் விலை 600 ரூபாவை தாண்டியது

Date:

நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெங்காயம் மாபியாவை முறியடிக்க முடியும் என அதன் தலைவி ஹஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை சந்தையில் பெருமளவு அதிகரித்துடன் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 600 ரூபாவாக உள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிக தேவை இருப்பதால், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்ளூரில் வெங்காயம் தட்டுப்பாட்டின் பின்னணியில் மாபியா இருப்பதால், ஒரு மாதம் வெங்காயத்தை உட்கொள்வதை நிறுத்தினால், இந்த மாபியாவை முறியடிக்க முடியும் என ஹஷினி சில்வா கூறியுள்ளார்.

வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ஏன் நிர்ணயிக்க முடியாது என ஹஷினி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாதம் வெங்காயம் சாப்பிடாமல் நிறுத்தினால் வெங்காயம் மாபியாவிற்கு என்ன நடக்கும் என்று பார்க்க முடியும்.

இறக்குமதியாளர்களுக்கும் அரசாங்க அமைச்சர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...