Thursday, May 2, 2024

Latest Posts

ஹவுதி போராளிகளின் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பது தெளிவாகி வருவதாகவும் ஹவுதி போராளிகள் கப்பல்களை தாக்குவதற்கு தேவையான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் உளவுத்துறை தகவல்களை ஈரான் வழங்கி வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

“செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அங்கு உறுதியற்ற தன்மையை உருவாக்க ஹவுதி போராளிகளுக்கு ஈரான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது. தெளிவான புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம்’ என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் முக்கிய கப்பல் வழித்தடங்களில் பயணிக்கும் அமெரிக்கா,இஸ்ரேல் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கா அண்மையில் 10 நாடுகளின் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.