கூட்டணி அமைக்கும் அதிகாரம் சஜித்துக்கு

Date:

அடுத்த வருடம் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க சமகி ஜன பலவேகவின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“சமகி ஜன பலவேகவின் செயற்குழு கூட்டம், இந்த ஆண்டின் கடைசி செயற்குழு கூட்டமாக கூடியது. அதில் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒன்று, கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டணியைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டுமொருமுறை ஒப்படைத்தோம். அதன்படி, தலைவராக அவர் எடுக்க வேண்டிய சரியான முடிவுகளை எடுத்து கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அனைத்து அமைப்பாளர்களுக்கும் குழுக்களுக்கும் தெரிவிப்பதற்கு பல பயிலரங்குகளை ஏற்பாடு செய்வதுடன், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் தொடர் மாநாடுகளை நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

கேள்வி – இப்போது இந்த சுதந்திர ஜனதா சபை இணையும் என்று கூறப்படுகிறது. அது எப்படி நடக்கிறது?

“அது பற்றி முடிவெடுக்கும் பொறுப்பும் அதிகாரமும் முழுமையாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி வெற்றிக்கு உகந்த அனைத்து அணிகளையும் இணைக்க செயற்குழு முடிவு செய்தது. எனவே, அவை தனி நபர்களா, அமைப்புகளா, அரசியல் கட்சிகளா என்பதை கட்சித் தலைவர் முடிவு செய்கிறார்.

சமகி ஜனபலவேக செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...