மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – சட்ட நடவடிக்கையெடுக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

Date:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே தற்போது வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.எஸ் அமைப்பு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறிவருகிறது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் வழக்கு தொடர்ந்து நீதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...