மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

இன்று (27) புதுடில்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

புதுடில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்நாட்களில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் முன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...