ஷவேந்திர சில்வா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு

Date:

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவம், விமானப்படை மற்றும்

கடற்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நீடிப்பு, டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றன.

அவர்களுக்கு மேலும் சேவை நீட்டிப்புகளை வழங்குவது குறித்தோ அல்லது அந்தப் பதவிகளுக்கு மற்றவர்களை நியமிப்பது குறித்தோ, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதுவரையில் தீர்மானம் எடுத்து, அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2020ஆம் ஆண்டு இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போதே, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். மேலும் அவர், ஜூன் 22, 1964 இல் பிறந்து தற்போது 60 வயதைக் கடந்துள்ளார். அவர், இராணுவத் தளபதியாக பதவியேற்கும் முன்னரே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய சேவை நீடிப்பின் அடிப்படையில் இராணுவத்தில் பணியாற்றினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தனது சேவை நீடிப்பில் உள்ளார். மேலும் அவர். டிசம்பர் 31ஆம் திகதியுடன் 57 வயதை பூர்த்தி செய்கிறார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும், சேவை நீடிப்பின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர், 2022 டிசம்பர் 18 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவும் சேவை நீடிப்பில் உள்ளார். அவர், அடுத்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதியன்று 56 வயதை நிறைவு செய்கிறார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவிக்கு, ஓய்வு பெறப்போகும் இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து, ஜனாதிபதி தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஓய்வு பெறப்போகும் முப்படைத் தளபதிகள், அந்தப் பதவிகளில் நீடிக்கப் போகிறார்களா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இராணுவத் தளபதிக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்படாவிட்டால், தற்போதைய இராணுவப் பிரதானியான மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

கஜபா திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ பிரதி அதிகாரி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...