Saturday, July 27, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சாராம்சம் 30.12.2022

இரண்டு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் டெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்த Galleon Fund நிறுவனர் ராஜ் ராஜரத்தினம், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய hedge-fund insider-trading வளையத்தின் மூளையாகக் கருதப்படுகிறார். சில இலங்கை அரசியல்வாதிகளை எதிர்வரும் நாட்களில் அவர் சந்திக்கவுள்ளார் : மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதியின் தற்போதைய கடன் ஆலோசகருமான டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ராஜரத்தினத்தின் Galleon Fund குழுமத்தின் பணிப்பாளராகவும் இருந்தார்.

கலால் திணைக்களத்தின் வருடாந்த வருமானம் ரூ.170 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 110 வருடங்களில் அதிகபட்சமான வருமானம் என கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கூறியுள்ளார் : 2020ல் ரூ.121 பில்லியனாகவும், 2021ல் ரூ.140 பில்லியனாகவும் காலால் வருமானம் இருந்தது. 2022 ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் மதுபான கேள்வி குறைந்துள்ளது எனவும் அவரை கூறியுள்ளார்.

மின்சார சபையின் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சம்பளமாக மாதாந்தம் ரூ.3.5 பில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகிறார்: ஒக்டோபர் 22 இல் CEB இன் வருமானம் ரூ.33.6 பில்லியனாகவும் நவம்பர் 22 இல் ரூ.35.6 பில்லியனாகவும் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஆரம்ப கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு அதன் பாரம்பரியக் நட்பாளார்களை தவிர மற்ற தமிழ்க் கட்சிகளுக்கு இடமளிக்கும் கோரிக்கையை நிராகரிக்கிறது.

அமெரிக்காவில் வாடகை வாகன சாரதியாக அடையாளம் காணப்பட்ட அமெரிக்க பிரஜை பிரிட்செட், மற்றும் அவரது ஜெர்மைன் நண்பர் அட்ரியன் (38), கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10.9 மி.மீ துப்பாக்கி தோட்டாக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ரூ.8 பில்லியன் மானியத்தைப் பயன்படுத்தி நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட ஆரம்பித்துள்ளது : நெல் பயிரிடும் சிறு-குறு விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000, அதிகபட்சமாக வழங்குகிறது. 2 ஹெக்டேருக்கு கீழ் திட்டமாக இந்த செயல்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

செங்குத்தான வருமான வரி விகிதங்கள் நடைமுறைக்கு வருவதால், பல்லாயிரக்கணக்கான இலங்கை தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஜனவரி 23 முதல் செலவினங்களையும் முதலீட்டையும் குறைக்க உள்ளனர்: 65% பணவீக்கம், மூன்று மடங்கு வட்டி விகிதங்கள், உயர் ஆற்றல் விலைகள் மற்றும் பாரிய வரி உயர்வு ஆகியவை நுகர்வுக்கான செலவினங்களை கடுமையாக பாதிக்கும். இதனால் குறைந்த ஊதியம் பெறும் பல இலங்கையர்கள் இடம்பெயரத் துடிக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதி பெறப்படும் என இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறுகிறார் : 4 ஆண்டுகளில் 2,900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (8 தவணைகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை 362 மில்லியன் டாலர்கள்) கிடைப்பது ஒரு “அற்ப உதவி” அல்ல என்றும் கூறுகிறார். இந்த ஏற்பாடு நிதி மதிப்பிற்கு அப்பாற்பட்ட “நாட்டின் மீது நம்பிக்கையை உருவாக்குகிறது”: IMF உதவியை பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே இலங்கை அதிகாரிகள் 4,000 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி வரவுகளைப் பெற்றுள்ளார். ஆனால், IMF நாட்டின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் உள்வரும் பயணிகள் மற்றும் வெளாடு செல்லும் அனைத்து இலங்கையர்களும் “வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை” ஆன்லைனில் நிரப்ப முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.