Saturday, July 27, 2024

Latest Posts

54 வயது பெண் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

சுவாசக் கோளாறு காரணமாக மெதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாகவும், அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.