Tuesday, April 23, 2024

Latest Posts

பாம்பு கடித்தவர் 10 நாட்களின். பின்னர் உயிரிழப்பு.

அனலைதீவில் பம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வீடு சென்ற குடும்பஸ்தர் 11 நாட்களின் பின்பு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதன்போது கார்த்திகேசு இரவீந்திரன் என்னும் 47 வயதையுடைய   5ஆம் வட்டாராம் அனலைதீவுச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

17ஆம் திகதி இரவு 7 மணிக்கு வீட்டில்  பாம்பு கடிக்கு இலக்கானவர் நோயாளர் காவு வண்டிப் படகுச் சேவையின் உதவியுடன்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்  17ஆம் திகதி  வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு வீடு சென்றவர்  26 ஆம் திகதி  வீட்டில் இருந்த சமயம் திடீர் மயக்கம் போட்டு வீழ்ந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  28ஆம் திகதி  அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.

இவரது மரணவிசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கூறினார். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.