மொனராகலையில் ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை!

Date:

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு இடங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களையும் தேடி வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...