இரகசியமாக இருந்த போதிலும், ஜனாதிபதி இன்னும் வேலை செய்கிறார்

Date:

இன்று நாட்டுக்கு வரவிருக்கும் எரிவாயுவை உடனடியாக விநியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 3700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து இரகசியமாக வெளியேறிய கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இரகசியமான பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியில் நீடிக்கப் போவதில்லை என தீர்மானித்த அவர், எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

நாளை மற்றுமொரு எரிவாயு கப்பல் வரும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3740 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளதுடன், இம்மாதம் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போது நாடு முழுவதும் நிலவும் எரிவாயு நெருக்கடி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...