கோட்டாபயவும் பசிலும் நாட்டை விட்டு வெளியேறினர்

0
462

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ விமானத்தில் புறப்பட்ட அவர்கள் மாலைதீவுக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்திய அரசாங்கம் தலையிட்டு அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு வசதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் செல்லும் இடம் இன்னும் வெளிவரவில்லை என்றும் துபாயாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here