ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்!

Date:

நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் அவர் இன்று 13 ஆம் திகதி பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவி விலகும் போது பிரதமர் இரண்டு வாரங்களுக்கு பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்ற அரசியல் யாப்பு விதிமுறைகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...