வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடமைகளை ஆரம்பித்தார்!

0
88

வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி (ஜூலை 25, 2022) அமைச்சில் நடைபெற்ற முறையான விழாவில் தனது பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டு அழுத்தங்களையும் கருத்தில் கொண்டு இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சின் ஆணையை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பதவி விலகும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்காக அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here