போராட்ட நாளன்று ஜனாதிபதி செயலகத்துக்குள் முதலில் நுழைந்தவர் கைது!

Date:

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் முதன் முதலாக பலவந்தமாக பிரவேசித்த நபர் என அடையாளம் காணப்பட்டவரை நேற்று (01) பிற்பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும், அவரது நடத்தையால் குழப்பமடைந்த குழுவினர் திடீரென பலவந்தமாக அங்கு நுழைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களும் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...