போராட்ட நாளன்று ஜனாதிபதி செயலகத்துக்குள் முதலில் நுழைந்தவர் கைது!

Date:

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் முதன் முதலாக பலவந்தமாக பிரவேசித்த நபர் என அடையாளம் காணப்பட்டவரை நேற்று (01) பிற்பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும், அவரது நடத்தையால் குழப்பமடைந்த குழுவினர் திடீரென பலவந்தமாக அங்கு நுழைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களும் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...