எரிந்த எம்.பி.க்களின் வீடுகளை மீட்க வேண்டும், இல்லையெனில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் – வஜிர

Date:

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது எரிந்து நாசமான அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் ஜனநாயகத்தின் பெயரால் புனரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

போராளிகளால் அழிக்கப்பட்ட ஒற்றை மாடி வீடுகளை இரண்டு மாடி வீடுகளாகவும், இரண்டு மாடி வீடுகளை மூன்று மாடி வீடுகளாகவும் மாற்ற வேண்டும் என்று வஜிர அபேவர்தன பரிந்துரைக்கிறார்.

மக்கள் பிரதிநிதிகளை கொல்வதும், அவர்களின் சொத்துக்களை அழிப்பதும், எரிப்பதும் ஜனநாயகம் அல்ல எனவும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் காட்டுமிராண்டித்தனமான சிந்தனைகளை கொண்டவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் எம்.பி. இவ்வாறான காட்டுமிராண்டிகளின் செயற்பாடுகளுக்கு பயந்து வாழ்வதை விட சாவதே மேல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே 09 கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நீதி வழங்கப்படாவிடின் எதிர்கால சந்ததியினர் அரசியலுக்கு வர மறுப்பார்கள் எனவும் அவ்வாறு செய்தால் அது ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வலியுறுத்துகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...