ரணிலின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்

Date:

காலி முகத்திடல் கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை முறியடித்து நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மந்தநிலைக்கு 2 ஆண்டுகளாக நீடித்த கோவிட் தொற்றுநோயே முக்கிய காரணம் என்றும், நாடாளுமன்றத்தின் 225 மக்கள் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையிலரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நல்ல திட்டத்திற்கு அமைய நிர்வகித்து நாட்டை புதிய அபிவிருத்திப் பாதைக்கு வழிநடத்திச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கட்சியின் தங்காலை, சீனிமோதர கிளை அமைப்பு மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...