மாற்று வழி குறித்த மைத்திரியின் அறிவிப்பு

0
171

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துவதே அடுத்த சிறந்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு சில மாதங்கள் ஆவதாகவும், இந்தக் கால கட்டத்தில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தாம் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொண்ட போதிலும், தொடர்ச்சியான சந்திப்புகளின் நிலை அப்படியே இருக்கிறது.

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அடிப்படையாக ஒரு தேசிய பேரவை கடந்த திங்கட்கிழமை முன்மொழியப்பட்டது. சில தரப்பினர் அதற்கு ஏதேனும் ஒரு சட்ட வடிவம் தேவை என்று கருத்து தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையாக மொட்டு கட்சி தெரிவித்தது. 

அவர்கள் இது அமைச்சரவையின் அதிகாரங்களைக் குறைக்கும் என்பதால், சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் இதை பாராளுமன்றத்தில் முன்வைக்கக் கூடாது என அவர்கள் கருதினர்.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு இடையில் சபையொன்று இடம்பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

“தங்களது தனிப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பலன்கள் பற்றி சிந்திக்காமல், அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதை நான் வருத்தத்துடன் கூறுகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், தேர்தலுக்கு செல்வதே மாற்று வழி என்பது தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here