திலினி மற்றும் கறுப்பு பணம் குறித்து நாமல் ராஜபக்ஷ கருத்து

Date:

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில் தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே முறைமை மாற்றத்திற்காக போராடினார்கள்.

சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக் கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அன்று எம்மை திருடன் என்றனர். எமக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரசாரத்தை அவர்கள் கைவிடவில்லை எனவும் கூறினார்.

ராஜபக்‌ஷவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர்.

சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...

மீண்டும் ஷானி? நடுக்கத்தில் பெரும் புள்ளிகள்!!

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர...