மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசு தயாராகிறது!

0
119

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செலவின மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here