UNP தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் ஆரம்பம்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த நேர்காணல்கள் நாளை முதல் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்காக இந்த நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையிலான குழு தகுதியானவர்களை தெரிவு செய்யும்.

தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...