‘பட்ஜட்’டை நிறைவேற்ற ஜனாதிபதி தரப்பு தீவிரம்

Date:

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன. ஆனால், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 121 வாக்குகள்தான் கிடைத்தன.

இதனால் ஒருவேளை பட்ஜட் தோல்வியடைந்துவிடுமோ என்று ஜனாதிபதி தரப்பு அஞ்சுகின்றது.

அரசுக்குள்ளும் சிலர் அமைச்சுப் பதவிகள் கேட்டு ரணிலுடன் முட்டி மோதுவதால் அவர்கள் இறுதி நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற அச்சம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் வாக்கு வேட்டையில் ஜனாதிபதி தரப்பு ஈடுபட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...