2020ஆம் ஆண்டிலேயே இலங்கை சர்வதேச நாணய நித்தியத்திடம் சென்றிருக்க வேண்டும்!

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தலையிடுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அப்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பணிப்புரையின் பேரில் அப்போதைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

கடனை மறுசீரமைப்பதற்காக கடன் வழங்கிய நாடுகளின் அனுமதியைப் பெறுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும், அப்போது ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்கிய நாடுகளும் நிறுவனங்களும் இலங்கையின் கடனை மறுசீரமைக்க மறுத்ததாகவும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது சிறந்தது என்று கூறிய அவர், 2020 ஆம் ஆண்டிலேயே அங்கு சென்றிருக்க வேண்டும் என தொடர்ந்து கூறினார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பதவியேற்கும் போது கூட இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன கடன் கடிதங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...