மருத்துவர்களின் ஓய்வு வயது குறித்து வெளியானது விசேட வர்த்தமானி!

Date:

மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதன்படி, மருத்துவ ஆலோசகர்கள், அரசு மருத்துவ அலுவலர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி திருத்தப்பட்டுள்ளது.

• ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், டிசம்பர் 31, 2022க்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 62 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 63 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 61 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 62 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அலுவலர்கள், 61 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவ அதிகாரிகள், 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

எவ்வாறாயினும், ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையில் ஓய்வு பெறும் வயதினர் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். ஜூன் 30 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.

அதேபோன்று ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்குள் ஓய்வு பெறும் வயதினர் டிசம்பர் 31 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...