மொனராகலையில் ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை!

Date:

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு இடங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களையும் தேடி வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...