75வது சுதந்திர விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி அறிவிப்பு

0
217

நாளை (பிப்ரவரி 04) நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

அதற்கமைவாக, இலங்கையில் ஒரு நெருக்கடியான நேரத்தில் பணத்தை விரயம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ப்போம் என்ற ஏகோபித்த தீர்மானத்தின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB)ஒட்டுமொத்தமாக நாளைய கொண்டாட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here