பருத்தித்தீவில் நோட்டமிட்ட சீனர்கள்!

Date:

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை, பிரதேச சபைத் தவிசாளர் ஒருவரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளவரே அழைத்துச் சென்றுள்ளதாக தீவகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்கு கடந்த 16ஆம் திகதி மாலை ‘கப்’ ரக வாகனத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் வந்துள்ளனர். அவர்களை, ஆளும் கட்சியின் யாழ். மாவட்ட பிரமுகர் ஒருவரே கொண்டு வந்து இறக்கியுள்ளார். இறங்குதுறையிலிருந்து தனிப் படகில் அவர்களை, கொலைச் சந்தேகநபரான வேறொரு பிரமுகர் அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்கள் முதலில் அனலைதீவில் சென்று இறங்கியுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் ஊரைப் பார்வையிட்டுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து சென்று பருத்தித்தீவில் இறங்கியுள்ளனர்.

சீனப் பிரஜைகள் படகில் எழுவைதீவுக்கு வடக்கே 9 கடல் மைல் தொலைவில் சுற்றித்திரிந்ததையும் மீனவர்கள் கண்டுள்ளனர்.

பருத்தித்தீவில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் நேற்றுமுன்தினம் இரவு தனிப் படகு மூலமாக இரகசியமாக அழைத்து வரப்பட்டு அவர்கள் கொழும்பு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...

பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு...

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...