இலங்கையை சர்வதேச வலைக்குள் சிக்கவைக்க ஆதாரங்கள் திரட்டும் பிரித்தானிய தமிழர் பேரவை

Date:

சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிக்கிறது.

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது.

அந்த அறிக்கை தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் அதன் பொது செயலாளர் ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிரியாவிற்கும் மியன்மாருக்கும் கொண்டுவந்ததைப் போன்று சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உருவாக்கியுள்ளோம்.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றது என்பது எல்லோருக்கம் தெரியும், ஆனால் அதனை நிரூபிப்பதற்கு, இனஅழிப்பிற்கான ஆதாரங்களைத் திரட்டி சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்குரிய காத்திரமான செயற்பாடுகள் செய்யப்படவில்லை.

எனவே தான் சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களைத் திரட்டுவது மிக முக்கியம் என பிரிரத்தானிய தமிழர் பேரவை கருதுகின்றது.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே மியன்மாருக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் வந்த போது, நிபுணர்கள், இராஜதந்திரிகள் போன்றோருடன் இது தொடர்பில் பேசி ஆராய்ந்து இது போன்று ஏன் தமிழ் மக்களுக்கான இன அழிப்பு தொடர்பாகவும் கொண்டு வரமுடியாது எனவும் வாதாடினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...