இலங்கையை சர்வதேச வலைக்குள் சிக்கவைக்க ஆதாரங்கள் திரட்டும் பிரித்தானிய தமிழர் பேரவை

Date:

சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிக்கிறது.

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது.

அந்த அறிக்கை தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் அதன் பொது செயலாளர் ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிரியாவிற்கும் மியன்மாருக்கும் கொண்டுவந்ததைப் போன்று சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உருவாக்கியுள்ளோம்.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றது என்பது எல்லோருக்கம் தெரியும், ஆனால் அதனை நிரூபிப்பதற்கு, இனஅழிப்பிற்கான ஆதாரங்களைத் திரட்டி சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்குரிய காத்திரமான செயற்பாடுகள் செய்யப்படவில்லை.

எனவே தான் சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களைத் திரட்டுவது மிக முக்கியம் என பிரிரத்தானிய தமிழர் பேரவை கருதுகின்றது.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே மியன்மாருக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் வந்த போது, நிபுணர்கள், இராஜதந்திரிகள் போன்றோருடன் இது தொடர்பில் பேசி ஆராய்ந்து இது போன்று ஏன் தமிழ் மக்களுக்கான இன அழிப்பு தொடர்பாகவும் கொண்டு வரமுடியாது எனவும் வாதாடினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...