அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

0
149

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை 25.04.2023 அன்று நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் உத்தரவுக்கு அமைய, தேர்தல் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இருந்த தடைகளும், நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்ட தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானிகளின் மூலம் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here