போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருமான ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன மற்றும் ‘குடு சலிந்து’ என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷக என்பவரும் இன்று(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினரால் சந்தேகநபர்கள் இருவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரும் அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.