ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

Date:

2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதுவரை எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்தப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கூட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருந்தும், நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எண்ணாயிரம் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...