புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தமை விஞ்ஞானப்பூர்வமாக உறுதி  

Date:

2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தமை விஞ்ஞானப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வீடொன்றுக்குள் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவரை அடையாளங்காணும் நோக்கில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

புலஸ்தினி மகேந்திரனின் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து பெறப்பட்ட எலும்புகளின் DNA மாதிரி பொருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் வீடொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சாரா ஜாஸ்மின் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...