புத்தாண்டு காலத்தில் 7,000 பேருந்துகள் இயக்கப்படும்; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Date:

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18 (செவ்வாய்கிழமை) வரை பொதுப் போக்குவரத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து பிற மாகாணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதே திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை பயணிகள் அந்தந்த இடங்களிலிருந்து கொழும்புக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 7,000 பேருந்துகள் இந்த காலப்பகுதியில் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனியார் பேருந்துகளும் அதிகமாக சேவையில் ஈடுபடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...