உள்ளூராட்சி தேர்தல் இரண்டாவது முறையும் ஒத்திவைப்பு!

0
87

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்த போதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here