மீண்டும் தலைதூக்கும் கொவிட்!

Date:

இலங்கையில் நேற்று (26) கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,150 ஆக உள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 2 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோய் பிரிவு நேற்று (26) உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655,285 ஆகும்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், இந்த நிலையில் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் போன்று கொவிட் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால், இதனை முறியடிக்க முடியும் என சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...