மீண்டும் தலைதூக்கும் கொவிட்!

Date:

இலங்கையில் நேற்று (26) கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,150 ஆக உள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 2 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோய் பிரிவு நேற்று (26) உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655,285 ஆகும்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், இந்த நிலையில் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் போன்று கொவிட் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால், இதனை முறியடிக்க முடியும் என சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...