ரயில் – ஆட்டோ மோதி விபத்து, இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

Date:

வெலிகமை – பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

நேற்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பணித்துக்கொண்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். விபத்தின் போது 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, 12 வயது பிள்ளையும் அவரது தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம மோதரவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...