முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி.ஹரிசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துள்ள ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
”அரசியல்வாதிகளால் பொதுவெளியில் வந்து கூட்டமொன்றை நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார். அதன் காரணமாக தாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 20 மூத்த தலைவர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S