செயற்கை நுண்ணறிவு பாடத்தை கல்வித்திட்டத்தில் உள்வாங்க தீர்மானம்!

Date:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு பாடங்களை 2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தரம் 06 முதல் 13 வரை மேற்படி பாடங்கள் கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சர்வதேச தரத்திற்கு இணையாக நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளுக்குள் இது தொடர்பான முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மாணவர் சமூகம் மத்தியில் ஆங்கில மொழிப் பாவனையை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...