கிழக்கு மாகாண ஆளுநராக நேற்று முன்தினம் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் , இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி இராமேஸ்வரன், கபில நுவன் அத்துகோரல,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் , அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
