சிங்கப்பூர், ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி!

0
243

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தூதுக்குழுவினருடன் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

முதற்பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்ட குழுவினருடன் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி, புறப்பட்டு சென்றுள்ளார்.

எதிர்வரும் மே 25 முதல் 26 வரை டோக்கியோவில் நடைபெறவுள்ள “ஆசியாவின் எதிர்காலம்-28” மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here