உயர்கல்விக்காக வட்டியில்லா கடன் ; அமைச்சரவைக்கு முன்மொழிவு!

0
60

தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்காகவே இந்த வருடாந்த வட்டியில்லாக் கடனுதவி யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படஉள்ளது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் மேலதிக கல்வியை தொடர ரூ.900,000 வட்டியில்லா கடன் கிடைக்கும்.

கல்வி முடிந்ததும் இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here