கொழும்பு இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை (LRT) மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்கு முன்னர், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், முதலீட்டுத் திட்டம் அல்லது வெளிநாட்டு உதவிக்காக இலங்கை வேறொரு நாட்டுடன் கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவருவது பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...