அநுர அணியின் இன்றைய போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

Date:

இராஜகிரிய தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (08) தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (01) பிரிவின்படி, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத், லால்காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹதுன்னெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே வீதி, கொட்டா வீதி, நாவல வீதி, சரண வீதி மற்றும் தேர்தல் காரியாலயத்தின் அணுகு வீதிகளில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ள தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளப்படும் என வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...