முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

Date:

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்குகொள்ளவே ஜனாதிபதி நேரில் முல்லைத்தீவு செல்கின்றார். இம் நடமாடும் சேவையில் அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பிறப்பு இறப்பு பதிவுகள் என்பன ஒரே நாளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இச் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் இதற்கான ஆவணங்களை முற்கூட்டியே பெற்று உரிய அதிகாரிகளின் கையொப்பத்தை பெறுவதன் மூலம் இந்த நடமாடும் சேவையில் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் சந்நர்ப்பம் உள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...