10 கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படை வீரர் கைது

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பேரூந்தில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் தலா இரண்டு கிலோ எடையுள்ள 5 கேரள கஞ்சா பொதிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...