10 கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படை வீரர் கைது

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பேரூந்தில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் தலா இரண்டு கிலோ எடையுள்ள 5 கேரள கஞ்சா பொதிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...